யுவதியை காப்பாற்றிய நடத்துனருக்கு அடி உதை

banner

நிக்கவரெட்டியவிலிருந்து - ரஸ்நாயக்கபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணம் செய்த , யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திலிருந்து காப்பாற்றிய பஸ் நடத்துனரை,  இருவர் தாக்கியதை அடுத்து அவர் நிக்கவரட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.





நிக்கவரெட்டிய இ.போ.ச டிப்போவை சேர்ந்த இந்த பஸ், இரவு 7 மணிக்கு ரஸ்நாயக்கபுரயை நோக்கிச் சென்றுள்ளது.





உடஹேனகம பிரதேசத்தில் வைத்து நடத்துனர் தாக்குதல் உட்பட்டதாகவும் இதனால் தமது டிக்கெட் இயந்திரத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 1,600 ரூபா பணமும் காணாமல் போய் உள்ளதாகவும் நடத்துனர் ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ள்ளார்.





நேபடாவ சந்தியில் வைத்து 18 வயதான யுவதி பஸ் வண்டியில் ஏறியதாகவும் சிறிது தூரம் சென்றவுடன் பக்கத்தில் இருந்த நபர் ஒருவர் தமக்கு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.





இதன் பின்னர் பஸ் நடத்துனர் அந்த யுவதியை அழைத்து வந்து பெண்ணொருவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமரச் செய்துள்ளார்.





இதன் பின்னர் யுவதி தியாகம பிரதேசத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றுள்ளார்.





பின்னர் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் தம்மை தூஷண வார்த்தைகளால் ஏசி தம்மைத் தாக்கியதாகவும் பஸ்ஸிலிருந்த அவர்களது உறவினர்களும் தம்மை கடுமையாக தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.





சம்பவத்துடன் தொடர்புள்ள நபர்களையும் யுவதியையும் தமக்குத் தெரியுமென்றும் இவர்கள் அனைவரும் ரஸ்நாயகபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நடத்துனர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.