வவுனியாவில் வாள்வெட்டு - குடும்பஸ்தர் பலி!

banner

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.





நேற்று (31) மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத்தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.





சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர்.





குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.