ஜோசப் ஸ்டானிலுக்கான யாழில் திரண்டது ஆசிரியர் படை!

banner

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





இன்று காலை 10:30 மணியளவில் ஒன்றுகூடிய அதிபர் மற்றும் ஆசிரியர்களே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இதன்போது ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டிக்கும் வாசகங்களைக் கொண்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தாங்கியிருந்தனர்.