எரிபொருளுக்காக கர்ப்பிணியான பெண்! இலங்கையில் ருசிகர சம்பவம்!!

Sri Lanka 1 வருடம் முன்

banner

மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கர்ப்பிணிபோல் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு வந்த பெண் தொடர்பான சம்பவமொன்று பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.





பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் ஒரு வரிசையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றுமொரு வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்தன.





இதற்கும் மேலதிகமாக சுகாதார சேவை ஊழியர்கள்,வைத்திய அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மாருக்காக தனியான வரிசையொன்றும் காணப்பட்டது.





இதை பயன்படுத்திக் கொண்ட பெணொருவர் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியைபோல் வந்து எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளார்.





எரிபொருளை பெற்றுக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிக்கு வந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை திருப்பும் போது தவறி விழுந்ததில் அவர் வயிற்றில் கட்டி இருந்த தலையணையும் கீழே விழுந்துள்ளது.





சம்பவத்தை பார்த்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். சம்பவத்தை அடுத்து அந்தப் பெண் வெட்கத்தில் கூனிக்குறுகியபடி தலையணையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றுள்ளார்.