ஜேர்மன் நாட்டவர் தூக்கிட்டு தற்கொலை!

banner

ஹிங்குரான நகருக்கு அண்மையில் விடுதியொன்றில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி குறித்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.





மகியஸ் சின்கர் என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.





இவர் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு அம்பாறை பிரதேசத்திலுள்ள, ஹிங்குரான நகருக்கு வந்து சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருப்பார் எனவும் இம்முறை இலங்கை வந்த அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஹிங்குரான பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.





இவர் மனைவியை விவாகரத்து செய்தவர் என்றும் இவர் இரு புதல்விகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. இன்று ஒரு புதல்வியின் பிறந்ததினம் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.





அம்பாறை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.