வவுனியாவில் காதைக் கடித்து வீதியில் துப்பிய இளைஞன்!
வவுனியா வீரபுறம் சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவரின் காது, கடித்து துண்டாடப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம், மோதமாக மாறி, பின்னர் காதை கடித்து துப்பிய சம்பவத்துடன் நிறைவடைந்தது.
மோதலின்போது ஒரு இளைஞர் , மோதலில் ஈடுபட்ட மற்றைய நபரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.
மற்றைய நபரின் தலையில் வாள்வெட்டு காயம் ஏற்பட்டது. அவர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Posts