பிரிட்டனில் தலைமறைவான இலங்கையர்களில் இருவர் கண்டுபிடிப்பு

banner

பிரிட்டன், பேர்மிங்ஹாமில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிக்குச் சென்று, தப்பியோடிய இருவர் மிட்லண்ட் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.





இலங்கை குழுவில் 30 வயதான ஜுடோ வீராங்கனையொவரும் 40 வயதான ஜுடோ பயிற்சியாளர் ஒருவருமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.





இலங்கை குழுவிலிருந்து இதுவரை ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். எனினும், இருவர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொதுநல வாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளுக்கு இலங்கையில் இருந்து 161 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.