பணம் வைத்து சூதாடிய நான்கு பாட்டிகள் கைது!

banner

மொரட்டுவ, அங்குலான பிரதேசத்தில் பாட்டிகள் ஒன்றிணைந்து நடத்திச் சென்ற சூதாட்ட நிலைமொன்றை சுற்றி வளைத்த பொலிஸார், நான்கு பாட்டிகளையும் , மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.





சூதாட்டத்தில் தோல்வியுற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார், குறித்த சூதாட்ட விடுதியை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.





அங்குலான, சயுருபுற மாடி வீட்டு தொகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த இந்த சூதாட்ட விடுதியில் 36,40,60,75 வயதுகளையுடைய பெண்கள் இருந்துள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.