'ஆஸி. செல்ல முயற்சித்த 701 பேர் கைது '

banner

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.





அதேநேரம், ஆஸ்திரேலியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட 210 பேர், நாட்டின் சில பாகங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.





இதேவேளை, சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 113 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.