சஜித் அணிக்குள் மோதலா? மீண்டும் அவசர கூட்டம்

banner

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.





கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள சஜித் பிரேமதாச, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்று தலைமை வழங்குவார்.





சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதி நடப்பதாகவும், தனிக்குழுவொன்று உருவாகவுள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தன.





இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு நேற்று முன்தினம் அவசரமாகக் கூடியது. சஜித்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.





இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றக்குழு மீண்டும் கூடவுள்ளது.