மாகாண தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு
Politics 2 ஆண்டுகள் முன்
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், பஸில் ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்தவருடம் முற்பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என அறியமுடிகின்றது.
Related Posts