2 நாட்கள் கொழும்பில் முகாமிடுமாறு பணிப்பு

banner

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கொழும்பில் கட்டாயம் இருக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.





நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இரு தினங்களும் கலந்துக்கொண்டு, நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.