ரஞ்சனுக்காக இன்று விடுக்கப்பட்ட கோரிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.





எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கட்சியின் சார்பில் இந்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்தார்.





" ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. சிறைக்குள் என்ன நடக்கும் என்பது தெரியாது. எனவேதான் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருகின்றோம்.





ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் அதனை எவரும் எதிர்க்கமாட்டார்கள். போராட்டங்களை முன்னெடுக்கமாட்டார்கள்." - என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.