நீண்ட நாளுக்கு பிறகு களத்துக்கு வந்த ஹிருணிக்கா

banner

‘பன்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பன்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





” நிருபமா ராஜபக்ச ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தால்கூட, அவர் பதுக்கிய பணம் 800 வருடங்களுக்கு போதுமானது. கொள்ளையடிப்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் குடும்பமும் அப்படிதான். இங்குள்ள வளங்களை, பணத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.





2022 ஆம் ஆண்டுவரும்போது நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அன்றே நான் சொன்னேன். ஆனால் 2021 இலேயே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. தற்போது மக்கள் கொடுப்பாவிகளைதான் எரிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஆட்சியாளர்களையே தாக்குவார்கள் என்பது உறுதி.





நாட்டை சீரழித்த பின்னர் ராஜபக்சக்கள் அமெரிக்கா சென்றுவிடுவார்கள். இது உறுதி. நான் சொல்வதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ராஜபக்சக்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.” – என்றார்.





நீண்ட நாட்களுக்கு பிறகே அவர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி, ராஜபக்சக்களுக்கு எதிராக இவ்வாறு கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.