'நல்லாட்சியே பொறுப்பு கூறவேண்டும்'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

"உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசு நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.





அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன .நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்."





இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.





உலகளாவிய உயர் தொழில்நுட்பத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “தெற்காசியாவின் பிரவேசமான அதிவேக வான் நுழைவாயில் ” என்று கருதப்படுகின்ற “கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் நேற்று(24) மாலைமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.





இந்நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





கொவிட் தொற்றுப் பரவல் காலத்திலும்கூட, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவையனைத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்காலத்தில் நாட்டை மூடவேண்டி ஏற்படாதிருப்பின், உறுதியளிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய முடியுமென்று மேலும் கூறினார்.