'இலங்கை முடக்கப்படாது' - அமைச்சர் அறிவிப்பு

banner

" நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு , அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.





இதன்போது, " நத்தார் பண்டிகை காலத்தில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டை முடக்கும் திட்டம் உள்ளதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.





அத்துடன், புதிய பிறழ்வு தொடர்பிலும் நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். சுகாதார தரப்பினர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானங்கள் எடுக்கப்படும்.