ஆளுங்கட்சி அடாவடியென சுட்டிக்காட்டி எதிரணி வெளிநடப்பு
Politics 2 ஆண்டுகள் முன்
நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்வரை, வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கும், இராஜாங்க அமைச்சர் காஞ்சனவுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மனுஷ நாணயக்காரவை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Related Posts