வெற்றி நடை தொடரும் - மொட்டு கட்சி நம்பிக்கை
" மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிநடைபோடும்." - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைப் பிடிக்கும், அதில் தான்தான் பாதுகாப்பு அமைச்சர் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் முதல் 20 ஓவர்கள்தான் நிறைவடைந்துள்ளன. ஓட்ட விகிதத்தில் சிறு ஸ்தம்பிதம். நிலைமை இப்படி இருக்கையில் வெற்றி தமக்கே என எதிரணி நினைப்பதுபோல்தான் சரத் பொன்சேகா கதைக்கின்றார். மீதம் 30 ஓவர்கள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.
மாகாணசபைத் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நிச்சயம் நடத்துவோம். மொட்டு கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்யும். இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சுக்காக சஜித்திடம் கையேந்துவது கவலையளிக்கின்றது." - என்றார்.
Related Posts