சொலமன்தீவுகள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
Politics 2 ஆண்டுகள் முன்
ந. பரமேஸ்வரன்
சொலமன்தீவுகள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் மத்தியூ வேல் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன,
எதிர்க்கட்சித்தலைவர் மக்கள் அரசாங்கத்தின் மீது கோபத்திலுள்ளனர் நாட்டுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை என தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதமர் சோகவரே மீது தமக்கு நம்பிக்கையுள்ளதாகவும் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் கூறியுள்ளனர். தான் பதவி விலகப்போவதில்லையென பிரதமர் சோகவரே தெரிவித்துள்ளார்.
Related Posts