கர்ப்பிணி பெண்மீது கத்திக்குத்து - கருவிலிருந்த சிசு பலி! கொழும்பில் பயங்கரம்!!
Politics 1 வருடம் முன்
கர்ப்பிணியான மனைவியை கத்தியால் குத்தி அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படும் கணவனை கொழும்பு மட்டக்குளிய, பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 வயதான கணவன் போதைவஸ்துக்கு அடிமையானவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஹெரோயின் போதைவஸ்து பாவித்த விட்டு, 17ஆம் திகதி மாலை 4 மணி அளவில் வீடு வந்த சந்தேகநபர் மனைவியுடன் சண்டையிட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தை சத்திர சிகிச்சை மூலம், இறந்த நிலையில் அகற்றப்பட்டுள்ளது.
Related Posts