ஆஸ்திரேலியா நுழைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

banner

" இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தஞ்சம் கோரிவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியாவில் ஒருபோதும் குடியமர்த்தப்படமாட்டார்கள்." - என்று அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.





இது விடயத்தில் தமது அரசின் கொள்கை மாறாது எனவும், எல்லைப் பாதுகாப்பு கடுமையாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





" சட்டவிரோதமாகவேனும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டால், அங்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும் என சிலர் தவறான புரிதலில் உள்ளனர். இது தவறாகும். சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் எமது கொள்கை மாறாது." - என்றும் அவர் அறிவித்துள்ளார்.