அடுத்து என்ன? 3 ஆம் திகதி முக்கிய அறிவிப்பு!

banner

" சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி அறிவிப்பொன்றை வெளியிடுவார்." - என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.





பிரதமர் இன்று கண்டிக்கு சென்று, தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்போது ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றுவார். இதன்போது சர்வக்கட்சி அரசு தொடர்பில் அவர் விளக்கமளிப்பார் என பிரதமர் குறிப்பிட்டார்.





அத்துடன், நாட்டுக்கு உதவிகளை பெறுவது தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.