ஜனாதிபதியின் உரை - 'செக்' வைக்க தயாராகும் எதிரணி!

banner

ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.





9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு, ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.





அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரை மாத்திரமே இடம்பெறும். இவ்வுரைமீது விவாதம் - வாக்கெடுப்பு நடத்த முடியாது.





எனினும், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்து விவாதிக்க முடியும். அந்தவகையிலேயே இரு நாட்கள் விவாதத்தை கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.