'ராஜபக்சக்களின் நிகழ்ச்சி நிரலே ரணிலின் சர்வக்கட்சி அரசு'

Politics 1 வருடம் முன்

banner

" அரசியல் நோக்கம் கொண்ட, ரணிலின் சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.





ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.





" குறுகிய காலப்பகுதிக்கே சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், சர்வக்கட்சி அரசின் கால எல்லை எவ்வளவு என்பதை ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடவில்லை.





நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை அப்பதவியில் நீடிப்பதற்கு திட்டம் தீட்டுகின்றார். சர்வக்கட்சி அரசு என்பது ரணில் - ராஜபக்சக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் அந்த பொறிக்குள் சிக்க நாம் தயாரில்லை." - எனவும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.