ரணிலிடம் கூண்டோடு சரணடைகிறது மைத்திரி அணி!

Politics 1 வருடம் முன்

banner

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.





சர்வகட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது.





தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் 7 அம்சக் கோரிக்கை முன்வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.





சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறுவதில் சுதந்திரக்கட்சி எம்.பிக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அக்கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அரசுடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.