யாழ். இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்!

Politics 1 வருடம் முன்

banner

யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி சைக்கீள் பயணத்தை ஆரம்பித்தனர்.





குறித்த சைக்கிள் பயணமானது காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.





தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கதிர்காமம் நோக்கிச்செல்கின்றனர்.





நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே சைக்கிள் பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.