கிறீன்ஸ் கட்சி அகிம்சை வழியிலேயே பயணிக்கின்றது எனவும், அறவழி போராட்டங்களுக்கே முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றது எனவும் அக்கட்சியின் தலைவரான Adam Bandt தெரிவித்தார்.
வன்முறைகளில் ஈடுபடும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு சார்பாக கிறின்ஸ் கட்சி செயற்பவதாக லேபர் கட்சியும், லிபரல் கட்சியும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையிலேயே, கிறின்ஸ் கட்சி தலைவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
காசா விவகாரத்தில் தனது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே தமது தரப்பு மீது பிரதமர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் எனவும் Adam Bandt சுட்டிக்காட்டியுள்ளார்.