ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியபோது, அதில் ஆஸ்திரேலிய கடற்படையினர் இருந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தங்கள் வீரர்கள் பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியதை, கிறீன் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியா இந்த சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளது என்றும், இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தமே இத்தகைய மோதல்களில் ஆஸ்திரேலியர்களை ஈடுபட வைக்கிறது என்பது அவர் தரப்பு வாதமாகும்.
மத்திய கிழக்கில் நடக்கும் வன்முறைகளில் ஆஸ்திரேலியா ஒரு முக்கியப் பங்காளியாக மாறிவிட்டதை இந்தச் சூழல் உறுதிப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.