குயின்ஸ்லாந்து அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட யூத எதிர்ப்பு முழக்கங்களை போராட்டத்தின் போது பயன்படுத்தியதற்காக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது, "ஆற்றிலிருந்து கடல் வரை" "from the river to the sea" என்ற வாசகத்தைப் பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது குற்றவியல் செயலாக அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
பொதுமக்களை அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையில் இச்சொற்றொடர்களைப் பயன்படுத்துவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகுக்கிறது.
இருப்பினும், இந்த சட்டங்கள் மக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக போராட்டக்காரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.