பேர்த்தில் உள்ள பாண்ட்யூப் பெண்கள் சிறையில் 35 வயதுடைய பூர்வக்குடி பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவரது மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கிடமான சூழலும் இல்லை என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறினாலும், இது குறித்த அறிக்கை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை ஒட்டி, ஆஸ்திரேலிய சிறை அமைப்புகளில் உள்ள அடக்குமுறை மற்றும் போதிய ஆதரவின்மை போன்ற குறைபாடுகளை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வன்முறை மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், கடுமையான பிணைச் சட்டங்களால் அதிகளவில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிறைச்சாலைகளில் பழங்குடியினப் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது.