ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் ஒத்துழைக்க மறுத்ததற்காக ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வளைகுடா பகுதியில் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பாதுகாக்க உதவி கோரிய சில நாட்களிலேயே, தங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்கள், அமெரிக்காவிடம் இருந்து முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும், நாட்டின் சுயாதிபத்திய முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
டிரம்ப்பின் இந்த சமூக ஊடகப் பதிவு கூட்டணிக் நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆஸ்திரேலியாவின் சுயாதீனமான தற்காப்புத் திறனின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்நாட்டுத் தலைவர்கள் கருதுகின்றனர்.