மெல்பேர்னின் Port Melbourne பகுதியில் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட 71 முதியவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவருக்கு உடலில் மூன்று இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபர் தப்பியோடிவிட்ட நிலையில், காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மெல்பேர்னில் நடந்த இரண்டாவது கத்திக்குத்துச் சம்பவம் இது என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாகப் போலீஸாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் பாதுகாப்பற்ற சூழல் நகரில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.