ஆஸ்திரேலிய காவல்துறை தங்களை அந்நாட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினர் என்று ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனை குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களைத் தடுக்க முயன்றதாகவும் Fatemah Shaban சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் எழுவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஐவர் ஈரான் திரும்ப முடிவெடுத்தனர் எனவும், இருவர் மட்டுமே தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையிலேயே தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளில் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரானிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாயகம் திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.