Northern Territoryகேத்தரின் நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 19 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.
இந்த வன்முறையில் காயமடைந்த மற்றொரு 18 வயது இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்ததால், இது ஒரு காவல் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இந்த மோதலுடன் தொடர்புடைய மற்றொரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்தப் பகுதியில் பல இடங்களில் குற்றவியல் புலனாய்வு சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரு வார காலத்திற்குள் நிகழ்ந்த மூன்றாவது காவல் மரணம் இது என்பதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.