ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தடையால் சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, குறிப்பாக எளிய மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பதற்றத்தைத் தணிக்கவும், நீரிணையைப் பாதுகாப்பாக மாற்றவும் சுமார் 40 நாடுகள் இணைந்து ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா ஈரானுக்கு எதிராக எந்த ஒரு இராணுவத் தாக்குதலையும் முன்னெடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய Penny Wong, இப்பிரச்சினைக்கு ராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்டுவதே தங்களின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.