ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி Roberts-Smith பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சாட்சிகளை சந்தேகநபர் திசை திருப்பக்கூடும் என்ற அரசுத் தரப்பின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிட்னி நீதிமன்றம் அவருக்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் இருந்தபோது அவர் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னரே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது சிவில் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஆஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.