சிட்னி தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார், விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
25 வயது இளைஞர் ஒருவரை இலக்கு வைத்தே 8 பேரடங்கிய குழுவொன்றால் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மூகமூடி அணிந்துக்கொண்டே குறித்த குழு வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் இளைஞனின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை பெற்றுவருகின்றார்.
வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம்மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, இரு வாகனங்களில் இந்த வன்முறைக் குழு தப்பிச்சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.