திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட டைக் வீதியில் 17 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணியகத்தின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 25 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, டைக் வீதியிலுள்ள மக்களை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேறு இடங்களில் இருந்து செல்பவர்கள் உள் நுழைய வேண்டாம் எனவும் சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
(அப்துல்சலாம் யாசீம்)