others

விக்டோரியாவில் மன்னரின் தலை துண்டிப்பு: விசாரணை ஆரம்பம்

விக்டோரியாவில் காலனித்துவ சின்னங்கள்மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலைமீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சிலையின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டு, ‘பெயின்ட்’ வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு இன்று காலை பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு விக்டோரியா மாநிலத்திலும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“ சிலையின் தலை அகற்றப்பட்டு, அதன்மீது சிவப்பு பெயின்ட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.” – என்று பொலிஸ் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.

Related Articles

Back to top button