காலநிலைக்கேற்ப உடல் நிலைகளும் மாறும். அதற்கேற்றாற்போல் உடல் பராமரிப்பின் தன்மைகளையும் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் குறிப்பிட்ட சில வகைகளில் பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.
*சருமத்துக்குப் பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து ஜொலிப்பாக்கும்.
*குளிர்ந்த காற்று முகத்தில் படும்போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக்கூடும்.
*குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைவதால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் கிறீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
- பேசியலைத் தவிர வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் விடும்.
- அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும்போது பயன்படுத்தி வரலாம்.
- நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றலாம். இது குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.