அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ‘புடின்’ என அழைத்து அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ‘உக்ரைன் காம்பெக்ட்’ என்ற உடன்படிக்கையை நேட்டோ அமைப்பின் 32 உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில் பைடன் பங்கேற்றார். அப்போது ஜெலன்ஸ்கியை பேச அவர் அழைத்தார். அப்போது ‘புடின்’ என அவரை சொல்லி இருந்தார். “உக்ரைன் ஜனாதிபதியை நான் அழைக்கிறேன். அவர் தைரியம் மிக்கவர் மற்றும் உறுதித்தன்மை கொண்டவர். ஜனாதிபதி புடினை வரவேற்கிறேன்” என பைடன் கூறினார். அதன் பின்னர் மேடையை விட்டு இறங்கிய போது…
பிலிப்பைன்ஸ், மனிலாவில் உள்ள சொகுசு சுற்றுலா விடுதியொன்றிலிருந்து ஆஸ்திரேலிய தம்பியினர் உட்பட மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. David James Fisk மற்றும் Lucita Barquin Cortez ஆகிய தம்பதியினரும், அவர்களின் உறவினர் ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஹோட்டல் அறைக்குள் நேற்று பணியாளர்கள் சென்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இவர்கள் சடலங்களாக கிடந்துள்ளனர். இது கொலை சம்பவமென கருதும் பிலிப்னைப்ஸ் நாட்டு பொலிஸார், அதற்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளும் ஆராயப்பட்டுவருகின்றன. தம்பதியினரில் கணவரின் சடலம் சிட்னிக்கு கொண்டுவரப்படவுள்ளது, உறவினர்களின் வேண்டுகோளின் பிரகாரம் மனைவி மற்றும் உயிரிழந்த மற்றையவருக்கான இறுதிக்கிரியைகள் பிலிப்பைன்ஸ்…
ரஷ்யாவை பிறப்பிடமாகக்கொண்ட இரு ஆஸ்திரேலிய பிரஜைகள், ரஷ்ய அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை வழங்கிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். Brisbane பகுதியில் வசிக்கும் தம்பதியினரே பெடரல் பொலிஸாரால் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியினருக்கு எதிராக புதிய வெளிநாட்டு தலையீட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 இல் வெளிநாட்டு தலையீட்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தம்பதியினருக்கு எதிராகவே இச்சட்டம் முதன்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையிலும் இருந்துள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் நீண்டகால விடுப்பில் இருந்தபோது ரஷ்யாவுக்கு இரகசிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தம்பதியினர் ரஷ்ய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு…
உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. நேட்டோ உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றுவருகின்றது. இதில் ஆஸ்திரேலியாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் Richard Marles பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டின்போதே மேற்படி உதவித் திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். நேட்டோ மாநாட்டின்போது உக்ரைனுக்கான உதவிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவுக்கு தொடர்ச்சியாக ஆயுதம் மற்றும் அரசியல் உதவிகளை வழங்கிவரும் சீனா, அவற்றை நிறுத்த வேண்டும் என நேட்டோ அமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் Richard Marles , அமெரிக்க ஜனாதிபதி, உக்ரைன் ஜனாதிபதி, ஜப்பான்…
சிட்னி வடமேற்கு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தாயும், மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 54 வயது தாயும், 13 வயதான மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். மகள் விசேட தேவையுடையவர் என தெரியவருகின்றது. இருவரின் சடலங்களும் வீட்டுக்குள் வெவ்வேறு இடங்களில் இருந்துள்ளன. உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரியவருகின்றது. இது சந்தேகத்துக்கிடமான மரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் எவ்வித சத்தமும் கேட்கவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பலகோணங்களில் விசாரணை தொடர்கின்றன.