ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கை முதன் முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும், பிரிஸ்பேன் மற்றும் பேர்த் ஆகிய பகுதிகளில் அடுத்த ஏழு ஆண்டுகளில் பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் பூர்வக்குடி மக்கள் மத்தியில் சனத்தொகை வளர்ச்சி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன்படி 2031 ஆம் ஆண்டளவில் பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பூர்வக்குடி மக்களுக்கான அமைச்சரும், கீழ்சபையின் முதலாவது பூர்வக்குடி பெண்ணுமான Linda Burney , அரசியலில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன், திறன்கள் மற்றும் பயிற்சி அமைச்சர் Brendan O’Connor வும் அரசியலில் இருந்து விலகவுள்ளார். இவ்விருவரும் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். இவர்கள் இருவரும் தமது அமைச்சு பதவிகளை விரைவில் துறக்கவுள்ளனர். இதனால் லேபர் அரசின் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Linda Burney 2016 முதல் சிட்னி Barton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பூர்வக்குடி பெண் இவராவார் என்பதுடன், ஆஸ்திரேலியாவில் அமைச்சராக பணியாற்றிய முதல் பூர்வக்குடி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.…
மேற்கு ஆஸ்திரேலியாவின் Kimberley பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் இரு விமானிகள் பலியாகியுள்ளனர். இன்று காலை 6.20 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 29 மற்றும் 30 வயதுகளுடைய விமானிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கால்நடைகள் தொடர்பான கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த இரு விமானங்களே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. இதனால் படுகாயமடைந்த இரு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமானது திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். ஒற்றையாட்சிமுறை நீக்கப்படும் பட்சத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ சிங்கள சமூகத்துடன் சேர்ந்து இந்நாட்டை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். அது நடைபெற வேண்டுமெனில் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி…
மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் சொன்னபடி முடித்துக் கொடுத்து விடுவீர்கள். பாராட்டுகளும் கிடைக்கும். தொழிலில் கடின உழைப்புக்கு ஏற்ற லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். வருமானம் சீராக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இரண்டு பேர் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால் அதை நீங்கள் மட்டும் செய்யுங்கள். உங்கள் பொறுப்புகளை இன்னொருவர் கைக்கு மாற்றிவிட வேண்டாம். சில பேருக்கு…