ஊழல்,மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டைவிட்டு தப்பியோடினால்கூட தேர்தல் முடிந்த பின்னர் அவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய ஏற்பாடுகள் உள்ளன என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுமார் 80 வரையான அரசியல்வாதிகள் விசா பெற்றுள்ளனர் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“தப்பியோட முற்படுபவர்கள் போகட்டும், அவர்கள் நிச்சயம் மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவார்கள். அர்ஜுன மகேந்திரனும் கொண்டுவரப்படுவார்.
அதேவேளை தாஜுதீன் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, 11 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட படுகொலை தொடர்பில் நிச்சயம் விசாரணை தொடரும். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் முதல் இறுதிவரை ஆராயப்படும். நான் சிறிசேன அல்ல, எனவே, முறையாக விசாரணை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.