வெளிநாடுகள் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை யாழ். பொது நூலகத்தைப் பார்வையிட்டனர்.
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று மாலை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று குடாநாட்டின் பல இடங்களுக்கும் அவர்கள் பயணிக்கின்றனர்.
குடாநாட்டின் கரையோரக் கிராமங்களுக்கு இன்று பயணிக்கும் அவர்கள், நாளை நெடுந்தீவுக்கும் பயணிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.