உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர் ஒருவர், திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
இணுவில் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான லவன் அக்சயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ். மாவட்ட மட்டத்தில் 24 ஆவது இடத்தைப் பெற்று அவர் சாதனை படைத்திருந்தார்.
பல்கலைக்கழகப் பிரவேசத்துக்காகக் காத்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.