எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, 153 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 49 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து, 104 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும், ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் வாக்களித்தனர்.