இலங்கையில் டெங்கு நோய் ஊழித்தாண்டவமாடிவருகின்றது. இவ்வருடத்தில் ஆறு மாத காலப்பகுதிக்குள் 52 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 31 பேர் பலியாகியுள்ளனர்.
மே மற்றும் ஜுன் மாதங்களில் பாதிப்பு வீதம் இரட்டிப்பாகியுள்ளது.
2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுன் மாதத்தில் மாத்திரம் 27 நாட்களுக்குள் 18 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 27 ஆயிரத்து 305 பேரும், தென் மாகாணத்தில் 8 ஆயிரத்து 243 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 714 பேரும், வடக்கில் 2 ஆயிரத்து 292 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
124 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது.
அதேவேளை,டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.