கொழும்பிலும் பொலிஸ் ஊரடங்கு

banner

இலங்கையில் கொழும்பு மாவட்டத்திலும் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உடன் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.





இதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லப்பிட்டிய, கிராண்ட்பாஸ் மற்றும் புளுமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இது தொடரும்.





கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.





மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.