2ஆவது அலைமூலம் 18,491 பேருக்கு கொரோனா

banner

நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.





இன்று இதுவரை 553 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.





கொரோனாவால் இதுவரையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 816 பேர் குணமடைந்துள்ளனர்.





2ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 18 ஆயிரத்து 491 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.