'கொரோனா' - இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

banner

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.





இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.





எனினும் கடந்துள்ள 28 நாட்களில் மாத்திரம் 96 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.





அதேவேளை, இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) நேற்று வரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர்.





2 ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றியவர்களில் நேற்றுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.





அதேவேளை இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 23 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து இருவர் காயமடைந்துள்ளனர். 116 பேர் உயிரிழந்துள்ளனர்.